தீபாவளியன்று காலை, மாலை தீபம் ஏற்றும்போது,“கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!”என்ற ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.
பொருள்: புழு, பறவை, மரம் எதுவானாலும், நீரிலும், நிலத்திலும் வாழும் ஜீவராசிகள் எதுவானாலும், மனிதர்களில் யாரானாலும், இந்த தீபத்தைப் பார்க்கும் அனைவரும் பாவங்களில் இருந்து விடுபட வேண்டும். பிறவிப்பிணி நீங்கி இன்பமாக வாழ வேண்டும். விளக்கேற்றும் புண்ணியபலனை உயிர்கள் எல்லாம் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.