தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது அவசியம். ஐப்பசி மாதம் குளிர்காலம் என்பதால் வெந்நீரில் குளிக்கிறோம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் சிறப்பு இருக்கிறது. நல்ல எண்ணெய்யில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய்த்தலையைக் கண்டால் அபசகுனம் என்பர். ஆனால், தீபாவளியன்று எண்ணெயில் லட்சுமி இருப்பதால் நீராடுவோருக்கு வளம் பெருகும். காவியணிந்த துறவியும் கூட எண்ணெய் தேய்த்து நீராடி தீபாவளியை கொண்டாட வேண்டும். இதன் மூலம் முன்வினைப்பாவம் கூட நீங்கும்.