மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் துலா உற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2018 12:11
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி மற்றும் வதான்யேஸ்வார் சுவாமி கோயிலில் துலா உற்சவ திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நாகை, மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இவ்வாண்டு துலா உற்சவம் கடந்த அக்டோபர் 18 ம் தேதி முதல் நாள் தீர்த்தவாரியுடன் தொடங்கியது. இதில் கடைசி பத்துநாள் உற்சவம் கடந்த 7ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13ம் தே தி திருக்கல்யாணமும் அதனை தொடர்ந்து இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினார். திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பண்டார சன்னதி சுவாமிகள் வடம் பிடித்து திருத்தேரோட்டத்தை தொடங்கிவை க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்திழுக்க திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், சிவபுரம்வேத சிவாகம பா டசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதுபோன்று தருமபுரம் ஆதினத்திற்கு செந்தமான வதான்யேஸ்வரர் சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்திழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு டி.எஸ்.பி.,வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா நாளை (16ம் தேதி) மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது.