Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் சஷ்டி ... மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் துலா உற்சவ தேரோட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பழநி கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

15 நவ
2018
12:11

பழநி: கந்தசஷ்டிவிழாவை முன்னிட்டு, பழநி முருகன்கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பழநி முருகன் மலைக்கோயிலில் கந்தசஷ்டிவிழா நவ., 8ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. கோயில் யானை கஸ்தூரி மலைக்கோயிலில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கியது. நேற்றுமுன்தினம் (நவம்., 13ல்) சூரசம்ஹாரம் நடந்தது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு, நேற்று (நவம்., 14ல்) மலைக்கோயிலில் விநாயகர் பூஜையுடன், கும்பகலசங்கள் வைத்து யாகபூஜையும், சண்முகர், வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது.

காலை 10:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் சண்முகர், வள்ளி,தெய்வானை அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியநாயகியம்மன்கோயிலிலும் நேற்று 14ல்  இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

* சின்னாளபட்டி:சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில் சஷ்டி விழாவில், திருக்கல்யாணம் நடந்தது. சின்னாளபட்டியில், நான்கு முகங்களைக்கொண்ட சதுர்முக முருகன் கோயில் உள்ளது. இங்கு, இந்தாண்டிற்கான சஷ்டி திருவிழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள், வேதிகார்ச்சனை உள்பட சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் சூரசம்ஹாரம், நேற்று முன்தினம் (நவம்.,13ல்) நடந்தது.
 
கலசாபிஷேகம், அன்னை காமாட்சியிடம் வேல் வாங்குதலைத்தொடர்ந்து, சூரசம்ஹாரம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று (நவம்., 14ல்) நடந்தது. யாகசாலை பூஜையுடன் துவங்கி, சிவசுப்ரமணியசுவாமி திருக்கல்யாணம் நடந்தது.கும்பாபிஷேகம்ம் பாடியூர் கிராமம் பி.கொசவபட்டியில் நூறாண்டு பழமை வாய்ந்த சிவசக்தி விநாயகர், பகவதியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக நவ.12 மாலை துவங்கி நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று (நவம்., 14ல்) காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ரெங்கநாத புரம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் அர்ச்சகர் ஹரி, திண்டுக்கல் காளியம்மன் கும்பாபிஷேக குழுத்தலைவர் பிரசன்ன வெங்கடேச அய்யர் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். வேடசந்தூர் பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, ஒன்றிய கமிஷனர் குருவானந்தம் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை ... மேலும்
 
temple news
சென்னை : சபரிமலையில் பக்தர்க:ள் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ... மேலும்
 
temple news
மதுரை : தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோமதி அம்மன் கோயிலில் பக்தர்கள் கல்வெட்டுகள் மீது சூடம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar