Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுக்ஞை விநாயகர் என்பவர் யார்? கால பைரவர் - பெயர்க்காரணம்? கால பைரவர் - பெயர்க்காரணம்?
முதல் பக்கம் » துளிகள்
பைரவர் பிறந்த வரலாறு!
எழுத்தின் அளவு:
பைரவர் பிறந்த வரலாறு!

பதிவு செய்த நாள்

26 நவ
2018
03:11

தாருகாசுரன் என்பவன் சிவனை நோக்கி  தவமிருந்து சாகாவரம் வேண்டினான். உலகத்தில் பிறந்தவர்கள் இறந்தாக வேண்டும் என்ற சிவன், ஏதேனும் ஒரு பொருளால் அழிவை வேண்டும்படி தாருகனிடம் கூறினார், ஆணவம் கொண்ட அசுரன், தன்னை ஒரு பெண் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தில், ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு வரலாம் என வரம் பெற்றான். பின்னர் தேவர்களைத் துன்புறுத்தினான். அவர்களது இனத்தையே அழிக்க முடிவெடுத்தான். பயந்து போய் பார்வதியிடம் முறையிட்டனர் தேவர்கள்.  சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் ஒரு பங்கை எடுத்து, ஒரு பெண்ணைப் படைத்தாள் பார்வதி. விஷத்தை “காளம்” என்பர். காளத்தில் இருந்து தோன்றிய பெண் “காளி” எனப்பட்டாள். அவள் கோபத்துடன் தாருகன் இருக்கும் திசை நோக்கி திரும்பினாள். அந்தக் கோபம் அனலாக மாறி அசுரனைச் சுட்டெரித்தது. பின் அந்தக் கனலை பயங்கர வடிவுள்ள குழந்தையாக காளி மாற்றினாள். அந்தக் குழந்தையையும், காளியையும் தன்னுள் அடக்கிய சிவன், அவள் உருவாக்கியது போலவே எட்டுக்குழந்தைகளை உருவாக்கினார். பின் அவற்றை ஒருங்கிணைத்து “பைரவர்” என பெயர் சூட்டினார். இதன் அடிப்படையில் சில கோவில்களில் அஷ்ட பைரவர் (அஷ்டம்-எட்டு) சன்னதி அமைந்திருக்கும். சீர்காழி சட்டைநாதர் கோயிலில் அஷ்ட பைரவர்களைத் தரிசிக்கலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar