பதிவு செய்த நாள்
07
டிச
2018
11:12
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி, மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை முன்னிட்டு, விவசாயிகள் செழிக்க, அம்மனுக்கு வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா சிந்தலவாடி அருகில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று மதியம், 1:30 மணியளவில் அம்மன் சன்னதி முழுவதும், ஒரு லட்சத்து, 8,000 வெற்றிலைகள் கொண்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், மாரியம்மனுக்கு மதுரை மீனாட்சி அலங்காரமும், ஐயப்பன் அலங்காரமும் வெற்றிலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார கிராம மக்கள், அம்மனை வழிபாடு செய்து சென்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம், வெற்றிலை விவசாயிகள் இணைந்து செய்திருந்தனர்.