திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2018 11:12
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோகநிலையில் இருக்கும் பைரவருக்கு கார்த்திகை வளர்பிறை பிரதமை திதியின்று சம்பக சஷ்டி விழா துவங்கி ஆறுநாட்கள் நடக்கும். முதல் நாளில் பைரவர் சன்னதி முன்மண்டபத்தில் யாகசாலையில் காலை 9:00 மணிக்கு அஷ்டபைரவர் யாகம் துவங்கியது. பைரவர் வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் பைரவர் சந்தனக் காப்பில் அருள்பாலித்தார். 6 நாட்கள் தொடர்ந்து காலை, மாலை யாகசாலை பூஜை நடக்கும். ஏற்பாட்டை ஐந்துகோயில் தேவஸ்தானம், சம்பகசஷ்டி விழாக் குழுவினர் செய்தனர்.