Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் மறுவூடல் ... காணும் பொங்கலையொட்டி திருத்தணி முருகன் வீதியுலா காணும் பொங்கலையொட்டி திருத்தணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சியில் வெளியூர் பக்தர்களை குறிவைக்கும் தரகர்கள்
எழுத்தின் அளவு:
காஞ்சியில் வெளியூர் பக்தர்களை குறிவைக்கும் தரகர்கள்

பதிவு செய்த நாள்

18 ஜன
2019
01:01

காஞ்சிபுரம்: காஞ்சியில், வெளியூர் பக்தர்களை குறி வைத்து, போலி பட்டுச் சேலைகளை விற்பனை செய்யும் தரகர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


காஞ்சிபுரம் நகரில் உலகப் புகழ் பெற்ற கோவில்களில் வழிபட, வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர், தினமும் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கைலாசநாதர் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், காமாட்சியம்மன் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவில்களுக்கு வரும் பக்தர்களை கவரும் வகையில், பட்டு சேலை தரகர்கள் பேச்சு கொடுத்து, போலி பட்டுச் சேலை கடைகளுக்கு அழைத்து சென்று, மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் காமாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை குறி வைத்து, உள்ளூர் தரகர்கள் பலர், இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். குறைந்த விலைக்கு பட்டுச் சேலை கிடைப்பதாகவும், தள்ளுபடி, இலவசம் உள்ளிட்ட சலுகைகளை கூறி, வெளியூர் பக்தர்களை, வாகனத்தோடு அழைத்து செல்கின்றனர். அவ்வாறு வெளியூர் ஆட்களுக்கு விற்கப்படும் பட்டுச் சேலைகள் பெரும்பாலும், 2,000 அல்லது, 3,000 ரூபாய் மதிப்பிலானதாக உள்ளன. வெறும், 2,000 அல்லது 3,000 ரூபாய்க்கு பட்டுச் சேலைகள் கிடைக்காது என்ற விழிப்புணர்வு, வெளியூர் பக்தர்களிடம் இல்லாததால், பலரும் இத்தகைய தரகர்களால் ஏமாறுகின்றனர். இதுமட்டுமின்றி, வரதராஜ பெருமாள் கோவில் வாசல் வெளியே, 500, 1,000 ரூபாய்க்கு, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி, ரகர்கள் பலரும் வலம் வருகின்றனர்.இது போன்ற, முறைகேடான செயல்களில் ஈடுபடும் தரகர்களை, போலீசார் கைது செய்ய வேண்டும் என, உள்ளூர் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். அதே சமயம், வரதராஜ பெருமாள் கோவில் வாசலில், அன்றாடம் போலீஸ் பாதுகாப்பு இருந்தது. ஆனால், சமீப காலமாக போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால், தரகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என, பல தரப்பினரும் வெளியூர் நபர்களை, பல விதங்களில் ஏமாற்றுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar