பதிவு செய்த நாள்
06
பிப்
2019
02:02
சென்னை: திருவொற்றியூர் நகர விடுதி, நகரத்தார் சார்பில் நடத்தப்படும் மாசி மக திருவிழாவின், வெள்ளி தேர் திருவிழா, 15ம் தேதி நடக்கிறது.
திருவொற்றியூரில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, நகரத்தார் சார்பில், மாசி மகம் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, தண்டாயுதபாணி கோவில் அறக்கட்டளை மற்றும் திருவொற்றியூர் நகர விடுதி நிர்வாகிகள் சார்பில், 15ம் தேதி, காலை, 7:35 மணிக்கு, மண்ணடி, பவளக்காரத் தெருவில் உள்ள, புது தண்டாயுதபாணி கோவில் வீட்டில் இருந்து, வெள்ளி தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும்.
பவளக்காரத் தெரு, ராயபுரம் மேம்பாலம், கம்மாளம்மன் கோவில் தெரு, தண்டு மாரியம்மன் கோவில், திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளின் வழியாக, திருவொற்றியூர் மாட வீதிகளை சுற்றி, திருவொற்றியூர் நகரத்தார் சத்திரத்தை அடையும்.அங்கு, 19ம் தேதி வரை, தண்டாயுதபாணிக்கு, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
இதில் தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபட உள்ளனர்.அதேபோல், 19ம் தேதி மாலை, 5:30 மணிக்கு, வெள்ளித் தேரில், தண்டாயுதபாணி புறப்பட்டு, 20ம் தேதி காலை, 6:00 மணிக்கு, மண்ணடி, பவளக்காரத் தெரு, விடுதியை அடையும்.