ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய ’பஞ்ச ஆரண்யத் தலங்கள்’ என்று ஐந்து கோயில்கள் உள்ளன. ’பஞ்ச’ என்றால் ஐந்து. ’ஆரண்யம்’ என்றால் காடு. இதில் முல்லைவனம் என்னும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் முதலிடம் பெறுகிறது. அதிகாலை 5.30 – 6.30க்குள் இங்கு தரிசிக்க வேண்டும். பின் காலை 8.30 –9.30க்குள் அவளிவநல்லூர் சவுந்தர்யநாயகி சமேத சாட்சிநாதர் (பாதிரி வனம்), பகல் 11.00 – 12.30க்குள் அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் (வன்னி வனம்), மாலை 5:00 – 6:00க்குள் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (பூளை வனம்), இரவு 7.30 – 8.30க்குள் திருக்கொள்ளம்பூதூர் வில்வ வனநாதரை தரிசிக்க வேண்டும். ஒரே நாளில் தரிசித்தால் பாவம் நீங்கி பிறவியற்றநிலை உண்டாகும். கும்பகோணம் அல்லது தஞ்சாவூரில் இருந்து செல்வது எளிது.