மதுரை - சோழவந்தான் பாதையில், மதுரையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது திருவேடகம். திருஞானசம்பந்தர் புனல்வாதம் புரிந்தபோது, அவர் வைகையிலிட்ட ஏடு கரை ஒதுங்கிய தலம் இது. இங்குள்ள ஏடகநாத ஸ்வாமி கோயில் புகழ்பெற்றது. இங்கு சிவராத்திரி நான்காம் ஜாமத்தில், பைரவருக்கு அபிஷேகம் நடைபெறும். இதுபோன்று சிவராத்திரியில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கும் மற்றொரு தலம் காசி மட்டுமே, இந்த பூஜையில் கலந்துகொண்டு பைரவரை தரிசித்து வழிபடுபவர்கள், அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவர் என்பது ஐதீகம்.