புதுச்சேரி : முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி, 22ம் தேதி காலை பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. இரவு அனுக்கை ஸ்ரீசேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. நேற்று காலை பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து இந்திர விமானத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. முக்கிய உற்சவமான தேரோட்டம் மே மாதம் 1ம் தேதி காலை 9:15 மணிக்கும், மாலை 6:00 மணிக்கு கோபுர வாயிலில் தீர்த்தவாரி நடக்கிறது. பிரம்மோற்சவ நாட்களில் தினமும் காலையில் திருமஞ்சனமும், மாலை ஒவ்வொரு வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.