எதையாவது அழுத்தமாக சொல்ல வேண்டுமானால் அதை மூன்று முறை சொல்லுவார் நாயகம். ’சொற்களில் மூழ்கி விடுபவர்களுக்கு கேடு தான்’ என்பதே அந்த வசனம்.
பேச்சாளர்கள் மக்களைக் கவர தங்களின் பேச்சுத்திறனை வெளிப்படுத்துவார். வார்த்தை அலங்காரத்தில் ஏமாற்றுவார். இதனால் சொல்ல வந்த கருத்து அடிபட்டு போகும். கருத்துக்களை புறக்கணித்து வெறும் சொல் அலங்காரத்தில் மூழ்கி விட்டு பின்னர் துன்பத்திற்கு ஆளாவர். தற்காலத்தில் அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களில் மயங்கும் மக்கள். இந்த அறிவுரையைப் பின்பற்றினால் தப்பிக்கலாம்.