பதிவு செய்த நாள்
24
மே
2019
01:05
கள்ளக்குறிச்சி:குடிகாடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று (மே., 23ல்) நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி குடிகாடு கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தேர்த்திருவிழா நடத்துவதற்காக கிராம மக்கள் சார்பில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.
இதனையொட்டி, ரத பிரதிஷ்டை வைபவம் நேற்று முன்தினம் (மே., 22ல்) மாலை
துவங்கியது. விநாயகர் வழிபாடு, புண்ணியாவஜனம், வாஸ்து சாந்தி, அங்குரார்பனம், அஷ்டபலி, பிரவேச பூஜைகளுக்குப்பின் கும்ப கலசத்தில் முத்துமாரியம்மனை மந்திர பூர்வமாக எழுந்தருளச் செய்து, பூஜை நடத்தினர்.
தொடர்ந்து, நேற்று (மே., 23ல்) அதிகாலை 4:00 மணிக்கு முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, லலிதா சகஸ்ரநாம மந்திரங்கள் வாசித்து, குங்கும அர்ச்னை செய்யப் பட்டது. கும்ப கலச பூஜை, யாகங்கள் நிறைவேற்றியபின் அதிகாலை 5:30 மணிக்கு தேருக்கு புனிதநீர் ஊற்றி, பசு பூஜை செய்து காலை 10:30 மணிக்குமேல் 12:00 மணிக்குள் குடிகாடு தேரோடும் வீதிகள் வழியாக தேர் வெள்ளோட்டம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை குடிகாடு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.