பதிவு செய்த நாள்
17
ஜூன்
2019
11:06
நாமக்கல்: ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல், ஆஞ்சநேயர் ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.ஒவ்வொரு தமிழ் மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும்.நேற்று, ஆனி முதல் ஞாயிறை முன்னிட்டும், பவுர்ணமியை முன்னிட்டும் சிறப்பு அபி ஷேகம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. தொடர்ந்து நல்லெண்ணெய், சீயக்காய்த்துாள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபி ஷேகம் நடந்தது. மதியம் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.