பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
12:06
பழநி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பழநி அடிவாரம் திருஆவினன்குடி கோயில் உட்பட பைரவர் சன்னதியுள்ள கோயில்களில் அபிஷேகம், அலங்காரத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
பழநி திருஆவினன்குடி கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு அபிஷேகம் செய்து, சந்தனகாப்பு அலங்காரத்தில் தீபாரானை நடந்தது. தேங்காய், வெள்ளைப்பூசணி ஆகியவற்றில் விளக்கு ஏற்றி, பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதேபோல கிழக்குரதவீதி பெரியநாயகியம்மன்கோயில், சண்முகநதிக்கரை பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. கால பைரவருக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் விளக்குப் பூஜை, பஜன் நடந்தது. வடை மாலை சாத்துதல், சொர்ணாபிஷேகம், பக்தர்கள் தேங்காய், நெய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். சர்வ அலங்காரத்தில் சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.