பதிவு செய்த நாள்
18
ஜூலை
2019
11:07
சபரிமலை, சபரிமலையில் ஆடி மாத பூஜைகள் தொடங்கியது. அடிக்கடி பெய்து வரும் மழையிலும் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்துக்கு திரண்டனர்.நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:30 மணிக்கு நடை திறந்த பின்னர் சந்திர கிரகணத்துக்கான பரிகார பூஜைகள் நடந்த பின்னர் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து நெய்யபி ஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு தொடங்கி வைத்தார் , தொடர்ந்து கணபதிேஹாமம், உஷபூஜை, உச்சபூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு படிபூஜை, 9:00 மணிக்கு அத்தாழபூஜை நடந்தது.ஜூலை 21 தேதி இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். அனைத்து நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். இதனால் மாலை 6:30 முதல் படிபூஜை முடியும் வரை பக்தர்கள் படியேற முடியாது. அடிக்கடி மழையும் பெய்து வருகிறது, எனினும் காலையிலும், மாலையிலும் அதிக அளவில் பக்தர்கள் குவிகின்றனர்.
தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையில் உருக்குலைந்த பம்பை மற்றும் தேவசம்போர்டு கோயில்களை சீரமைப்பதற்காக, மாநில அரசு 100 கோடி ரூபாய் அனுமதித்திருந்தது. இதில் முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் தேவசம்போர்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேவசம்போர்டு வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகை மானியாக மாநில அரசு தருவது முதன் முறை. சபரிமலை பக்தர்களுக்காக தேவசம்போர்டு ெஹலிகாப்டர் வசதி செய்துள்ளதாக வெளிவரும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது. தனியாருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை., இவ்வாறு அவர் கூறினார்.