கவுமாரியம்மன் கோயில் விழா: அக்னிசட்டி எடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2019 11:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை எடுத்து அம்மனை வழிபட்டனர். பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் அறநிலையத்துறைக்கு உட்பட்டது.
அம்மனை வழிபட்டால் பக்தர்களுக்கு சகலஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனித்திருவிழாவுக்காக ஜூலை 2 ல் சாட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டது. ஜூலை 8 ல் கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா துவங்கியது. நேற்று பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை எடுத்தும், சேத்தாண்டி வேடமிட்டும் அம்மனை வழிபட்டனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார். சிதம்பரசூரியநாராயணன் நினைவாக தென்கரை வர்த்தக சங்க தலைவர் சிதம்பரசூரியவேலு, குடும்பத்தினர் திருக்கண் அபிேஷகம் நடத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். நகராட்சி சுகாதாரத்துறை மேற்பார்வையில், பணியாளர்கள் தொடர் துாய்மைப்பணி செய்தனர். டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை செயல்அலுவலர் அண்ணாதுரை, மண்டகபடிதாரர்கள் மற்றும் பூஜாரிகள் செய்தனர். ஜூலை 23ல் மறுபூஜை நடக்கிறது.