Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் சந்திர கிரகண ... சபரிமலையில் ஆடிமாத பூஜைகள் தொடக்கம் சபரிமலையில் ஆடிமாத பூஜைகள் தொடக்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தாட்டுகுளம் கோயிலில் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி துவக்கம்
எழுத்தின் அளவு:
கூத்தாட்டுகுளம் கோயிலில் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி துவக்கம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2019
11:07

கோட்டயம், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் பத்ரகாளி கோயிலில் நோய் தீர்க்கும் மருந்தை பிரசாதமாக வழங்கும் ஒரு மாத நிகழ்ச்சி நேற்று துவங்கியது. கோட்டயத்தில் இருந்து 37 கி.மீ. எர்ணாகுளத்தில் இருந்து 46 கி.மீ. துாரத்தில் உள்ளது ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்.

இந்த மருத்துவமனை வளாகத்தில் நெல்லிக்காட்டுமனாவில் உள்ளது பத்ரகாளி கோயில். இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு நிவேத்தியம் செய்த மருந்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழங்கால சுவடிகளில் குறிப்பிட்டவாறு பல்வேறு மூலிகைகள் கலந்து ஆயுர்வேத சாஸ்திரப்படி இந்த மருந்து தயார் செய்யப்படுகிறது. வேதவிற்பன்னர்கள் முன்னிலையில் மந்திரங்கள் ஓதி அம்மனுக்கு நைவேத்தியம் செய்து பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் பல்வேறு நோய்களை தீர்க்கும் என்பது ஐதீகம்.இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி நேற்று காலையில் துவங்கியது. ஆகஸ்ட் 16 வரை தினமும் காலை 6:00 முதல் 11:00 மணி வரையும் மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரையும் மருந்து பிரசாதம் வழங்கப்படும்.விழாவை முன்னிட்டு 25 யானைகள் கலந்து கொள்ளும் கஜபூஜை ஜூலை 21ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. பக்தர்கள் பொங்கலிடும் மருந்து பொங்கல் நிகழ்ச்சி ஜூலை27 ம் தேதி காலை 9:00 மணிக்கு நடக்கிறது.மேலும் அறிய 94476 14800ல் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் பிலாஸ்பூர் ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் சச்சிதானந்த தீர்த்த ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar