வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே நீரேத்தான் நவநீதபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இருவீட்டார் அழைப்பை தொடர்ந்து ஆண்டாள், சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை கிருஷ்ணானுபவம் என்ற தலைப்பில் பேச்சாளர் நிவாஷரியார் பேசினார். விழா ஏற்பாடுகளை பரம்பரை அர்ச்சகர்கள், கிராமத்தினர் செய்தனர்.