பதிவு செய்த நாள்
19
ஆக
2019
04:08
தேனி: விநாயகர் சதுர்த்தி விழாவில் ஒன்பது நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக் கலாம். “என, கலெக்டர் எம். பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: செப்., 2ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சிலை வைக்கப் படும் இடத்திற்கும், ஒலிபெருக்கி வைக்க மின்வாரியம், போலீசார், தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ்கள் பெற்று, அதனுடன் ஆர்.டி.ஓ., விடம் விண்ணப்பித்து சான்றிதழ் பெற வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத, எவ்வித ராசாயண கலவையற்ற, கிழங்கு மாவு, மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரித்த, ஐவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை களை நீர்நிலைகளில் பாதுகாப்பாக கரைக்கலாம். இயற்கை வண்ணங்கள் மட்டுமே பூசியி ருக்க வேண்டும். ரசாயண வண்ணம் பூசப்பட்ட சிலைகள் பயன்பாட்டிற்கும், நீர்நிலைகளில் கரைக்க அனுமதி கிடையாது.
விநாயகர் சிலைகளை நிர்ணயிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைத்திட வேண்டும். இதில் பெரிய குளம் வராகநதி பால சுப்ரமணியம் கோயில் கரை, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற் றில் ஞானம்மாள் கோயில் கரை, சுருளிப்பட்டி (கம்பம்) முல்லைப்பெரியாற்றிலும், தேனி அரண்மனைப்புதூர் பாலம் அருகில் முல்லைப் பெரியாற்றிலும் ஆண்டிபட்டி பெரியகுளம் ரோட்டில் வைகை அணை பாலம், வருஷ நாட்டில் வைகை ஆறுமொட்டப்பாறை தடுப்பணை, போடி கொட்டக்குடி (புதூர்) ஆற்றிலும், மார்க்கையன்கோட்டையில் முல்லை பெரியாற்றில் சின்னமனூர் மார்க்கையன்கோட்டை பாலம் அருகிலும், சின்னமனூரில் மார்க்கையன் கோட்டை ரோட்டில் முல்லைப் பெரியாற்று பாலம் அருகிலும் கரைக்கலாம். விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் சுற்றுச்சுழல் பாதிக்காத வண்ணம் கொண்டாடிட வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.