குருவாயூர் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள கிருஷ்ணனை குருவும் வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததாகப் புராண வரலாறு கூறுகிறது. இங்குள்ள உன்னிகிரு ஷ்ணன் விக்ரகம். பாதாள அஞ்சனம் எனும் அபூர்வப் பொருளால் ஆனது. குரு வாயூரில் இரவு நேரத்தில் பகவான் தருகிற தரிசனம் திருபுக்கா தரிசனம் எனப்படும். அந்தப் பூஜையின்போது எட்டு வகையான வாசனைப் பொருட்களை தூபமாகப் பய ன்படுத்துவார்கள். இந்தப் பூஜையில் பகவானை தரிசிக்க உடல்நலம் வளம்பெறும்; சுகமான வாழ்வு கிட்டுமென்பது ஐதீகம்.