காரைக்கால்: காரைக்காலில் நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு பெருமாள் முத்தங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தை ஒட்டி ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். அதன்படி புரட்டாசி நான்காம் சனியை முன்னிட்டு மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின் மூலவர் மற்றும் உற்சவர் நித்திய கல்யாண பெருமாளுக்கு முத்தங்கி சிறப்பு அலங்காரத்தில் நித்திய கல்யாண பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவினர் நித்திய கல்யாண பக்த ஜசபாவினர் சிறப்பாக செய்திருந்தனர்.