வெள்ளகோவில், வரதராஜ பெருமாள் கோவிலில் நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கடைசி புரட்டாசி சனிக்கிழமை , வரதராஜ பெருமாளுக்கு துளசிமாலை சாற்றப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.