திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் திருப்பவித்ரோத்சவ விழாவில் பூர்ணாகுதி நடந்தது.
திருக்கோவிலூர், உலகளந்த பெருமாள் கோவில் கடந்த 9ம் தேதி திருப்பவித்ரோத்சவ விழா துவங்கியது. 4ம் நாளான அதிகாலை 4:30 மணிக்கு சுப்ரபாத சேவை, மூலவர் திருவிக்ரமன் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 5:30 மணிக்கு நித்திய பூஜை, 8:00 மணிக்கு ஏகாதசி மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீசபெருமாள், புஷ்பவல்லி தாயார் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் முன்பாக 11:00 மணிக்கு பவித்ர ஹோமம், பூர்ணாகுதி, திருவாராதனம் சாற்றுமுறை நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாசராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.