மேலக்கடம்பூர் திருக்கோயில் சிற்பக் கலைக் கோயிலாகவும் உள்ளது. முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட கருவறை வெளிச்சுவரில் ஐந்து தேவகோட்ட ங்கள் உள்ளன. கருவறை தேவகோட்டத்தில் ஆலமர்செல்வன் கட்டுமலை ஒன்றின்மேல் காளை மீது அமர்ந்து ஞானமூர்த்தியாகவும், அதன் மேல் மாடத்தில் யோகப்பட்ட நிலையில் கையில் வீணையுடனும் முதல் தளத்தில் நின்றபடி வீணாதரராகவும் அருள்கிறார்.
அதேபோல் மற்றுமுள்ள தேவகோட்ட தெய்வங்களாக மகாவிஷ்ணுவும் பிரம்மனும் அருள்கின்றனர். ஒவ்வொன்றிலும் மூன்று தளங்கள் திகழ.... ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு வடிவில் அருளுகின்றனர். கருவறை புறச்சுவர் முழுவதும் 63 நாய ன்மார்களின் திருக்கதைகள் குறித்த சிற்பங்களும், நாட்டியக் கரணங்களும், சிவமகேஸ்வர வடிவங்களும், முக்கோடி தேவர் வழிபடும் காட்சியும், ராமாயண, கிரு ஷ்ண லீலைகள் தொடர்பான சிற்பங்களும் கொள்ளை அழகோடு திகழ்கின்றன!