Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நரசிம்மர்
  புராண பெயர்: கரிகிரி
  ஊர்: தேவராயன துர்கா
  மாவட்டம்: தும்கூர்
  மாநிலம்: கர்நாடகா
 
 திருவிழா:
     
  நரசிம்ம ஜெயந்தி  
     
 தல சிறப்பு:
     
  திருப்பதியைப் போல மகாலட்சுமி தாயார் தனிக்கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் தேவராயன துர்கா, தும்கூர் மாவட்டம் கர்நாடகா.  
   
    
 பொது தகவல்:
     
  ஒரு காலகட்டத்தில் இந்தப் பகுதியை வென்ற மைசூரு மன்னர் கிருஷ்ணராஜ உடையார்-3 இதன் பெயரை தேவராயன துர்கா என மாற்றினார்.  
     
 
பிரார்த்தனை
    
  எதிரி பயம் விலக, நினைத்த காரியம் நிறைவேற இங்குள்ள நரசிம்மரை வழிபட்டுச் செல்கின்றனர்.

 
    
நேர்த்திக்கடன்:
    
  நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

சுற்றிலும் பச்சைப்பசேல் மரங்கள், செடி கொடிகள் சூழ இப்பிரதேசம் இயற்கை அழகு கொஞ்சும் இடமாக உள்ளது. இந்தக் குன்றின் கீழும், மேலும் நரசிம்மர் இருக்கிறார். கீழே உள்ளவரை போக நரசிம்மர் என்றும், மேலே உள்ளவரை யோக நரசிம்மர் என்றும் அழைக்கின்றனர். இதைத் தவிர மூன்றாவது அடுக்கில் கும்பி நரசிம்மர் எனவும் ஒரு நரசிம்மர் குடி கொண்டுள்ளார். கீழேயுள்ள நரசிம்மர் லட்சுமியை மடியில் அமர்த்திக் கொண்டுகம்பீரமாய் காட்சி தருவதால் இவர் லட்சுமி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். கோயில் அமைப்பு எளிமையானது. கர்ப்பகிரகம், முன் மண்டபம், துவஸ்தம்பம் என திராவிடர் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் தோற்றத்தை போன்றே மேலேயுள்ள யோக நரசிம்மர் கோயில் உள்ளது.



பல அரசர்களால் காலந்தோறும் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலை மன்னர்கள் நிர்வகித்து வந்தனர். மைசூரு மன்னர் ஆட்சி வந்ததும், இரு கோயில்களையும் 1858ம் ஆண்டு புதுப்பித்தார்.  கீழே உள்ள போக நரசிம்மரை தரிசித்த பின் பக்தர்கள் மேலேயுள்ள யோக நரசிம்மரை தரிசிக்க செல்கின்றனர். பக்தர்கள் விரும்பினால் மேலேயுள்ள கும்பி நரசிம்மர், மிகப்பழைய ஆஞ்சநேயர் மற்றும் கருடன் கோயிலையும் தரிசிக்கலாம். குன்றின் அடியில் ஒரு இடத்தில் நீரூற்று உள்ளது.



 
     
  தல வரலாறு:
     
  ஒரு சமயம் ராமர் இந்தப் பகுதிக்கு வந்ததாகவும், அப்போது நாமம் இட நாமக் கட்டியை கரைக்க தண்ணீரைத் தேடியும் கிடைக்காததால், ஒரு அம்பு விட்டு இந்த நீருற்றை உருவாக்கியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இந்த நீரூற்று இன்றும் இங்கு உள்ளது. ராமர் பாதமும் அருகில் உள்ளது. குன்றுக்கு சற்று தூரத்தில் மகாலட்சுமிக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: திருப்பதியைப் போல மகாலட்சுமி தாயார் தனிக்கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar