Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பாலகிருஷ்ணன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பாலகிருஷ்ணன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாலகிருஷ்ணன்
  ஊர்: திப்பிரமலை
  மாவட்டம்: கன்னியாகுமரி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளிலும், அமாவாசை  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள கிருஷ்ணன், தன் தாயார் யசோதையுடன் 12 அடி உயரத்தில் அமைந்திருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பாலகிருஷ்ணன் திருக்கோயில் மார்த்தாண்டம், திப்பிரமலை கன்னியாகுமரி.  
   
    
 பொது தகவல்:
     
  திப்பிரமலை கிருஷ்ணன் கோயில் சேர நாட்டுக் கட்டடக் கலையில் கட்டப்பட்டுள்ளது. வட்ட வடிவத்தில் கோயிலும், ஓடு வேய்ந்த விமானமும் கொண்டுள்ளது. கூம்பு வடிவத்தில் விமானம் காட்சியளிக்கிறது. இத்திருக்கோயிலின் முன்பு பலிபீடம் அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் கிடைக்க, நினைத்த காரியம் நிறைவேற, செய்யும் தொழிலில் வெற்றி அடைய இங்குள்ள கிருஷ்ணரை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்து, வெண்ணெய் சாற்றி, சீடை, முருக்கு நைவேத்தியம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  பன்னிரண்டு அடி உயரத்தில் பேருருவத்தில் கிருஷ்ணனின் திருவுருவம் அமைந்திருக்க, வலது பக்கத்தில் தாய் யசோதா மகனின் காலடியில் நிற்கிறார். அன்னையின் வலது கையில் வெண்ணெயும் இடது கையில் கரண்டியும் உள்ளது. இது ஒரு அற்புதமான திருக்கோலமாகும். இவ்வாறு கிருஷ்ணன் தாயாரோடு கோயில் கொண்டுள்ள அபூர்வ தலமாகக் கருதப்படுகிறது திப்பிரமலை. கோயில் கருவறையில் பன்னிரண்டு அடி உயரத்தில் கிருஷ்ணனின் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேலே உயர்த்திய கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியும், கீழ்நோக்கியுள்ள கைகளில் வலது கையில் வெண்ணெயும், இடது கையில் கதையும் ஏந்தியவாறு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கும் பாலகிருஷ்ணனின் திருவுருவம்தான் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய சிலையென்று கூறப்படுகிறது.  
     
  தல வரலாறு:
     
 

கிருஷ்ணனின் லீலைகள் பற்றி பாகவதத்தில் பல நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கண்ணன் சிறுவயதில் வெண்ணெய் திருடி உண்பதாகும். கிருஷ்ணன் வெண்ணெய் திருடி உண்டதையறிந்த தாயார் யசோதை கண்ணனை கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்கிறாள். அப்போது குழந்தைக் கண்ணன், குழந்தையாகவே கையில் வெண்ணெயுடன் விஸ்வரூபம் எனப்படும் பேருருவம் எடுத்து அன்னை யசோதாவுக்குக் காட்சி தருகிறார்.

இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது இரணியல் என்ற ஊரைச் சேர்ந்த வைணவ பக்தர் ஒருவர் இக்கோயிலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள மக்கள் ஆண்டுதோறும் கிருஷ்ணன் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளிலும், அமாவாசை நாட்களிலும் ஏராளமான மக்கள் வருகை தந்து பாலகிருஷ்ணனை சேவித்துச் செல்கிறார்கள். இத்தகையத் தலங்கள் எல்லாம் நம்மை வாழ்விக்கத் தோன்றியவை. எத்தனை தவறுகள் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் அதற்குரிய பலன்களை நாம் அனுபவிக்கும் போது நாராயணா என்றோ கிருஷ்ணா என்றோ ஒருமுறை மனமுவந்து பெருமாளைச் சரணாகதி அடைந்துவிட்டால் அத்தனை பாவங்களும் விலகி ஆனந்தமான வாழ்க்கை ஏற்படும் என்பது அசைக்க முடியாதது.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள கிருஷ்ணன், தன் தாயார் யசோதையுடன் 12 அடி உயரத்தில் அமைந்திருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar