Special supplement · Part 1 · page 25 · 7 / 159
கும்பாபிஷேகம் எப்படி நடக்கும்
மண், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா என இந்த எட்டு நிலைகளில் கடவுளை அமைத்துப் பூஜை செய்து திருவருளைக் கலசத்தில் ஆவாஹனம் செய்வர். பின் அக்கும்பத்தை கோயில் வலமாக எடுத்துச்சென்று கருவறையில் அமைந்துள்ள சுவாமியின் மீது அப்புனித தீர்த்தத்தை அபிஷேகம் செய்வார்கள். இப்படி உயிர்களுக்கு திருவருளை வழங்கச் செய்வதே கும்பாபிஷேக வைபவமாகும்.