Special supplement · Part 2 · page 43 · 83 / 159
கண்கள் இரண்டால்...
மீன் எப்போதும் கண்களை மூடாமலேயே இருக்கும். அதைப்போலவே அம்பாள் மீனாட்சியும் எப்போதும் விழித்திருந்து பக்தர்களை காக்கிறாள். எனவே தனது வலது காலை சற்றே மடக்கி, கிளம்ப தயாராக இருக்கும் கோலத்தில் காட்சி தருகிறாள். ஆதிசங்கரர் மீனாட்சியை பற்றிப் பாடும்போது, ‘கடலில் இரண்டு மீன்களைக் காண்பதாக’ குறிப்பிடுகிறார். கருணை (அம்பிகை) என்னும் கடலுக்கு, கண்களாகிய இரண்டு மீன்கள் இருக்கின்றன என்ற பொருளில் இவ்வாறு சொல்கிறார்.