Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2012
11:07

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவின் 9ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் நடந்தது. தொடர்ந்து அம்பாள் ரதத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு நிலையில் இருந்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பகல் 12.05 மணியளவில் மீண்டும் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. தேரில் கோமதிஅம்பாள் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்ட நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர்(பொறுப்பு) கண்ணன், சங்கரநாராயணசுவாமி கோயில் இணை ஆணையர் அன்புமணி, தாசில்தார் தாமோதரன், யூனியன் சேர்மன் அன்னலட்சுமி, கோயில் உதவி ஆணையர் பொன் சுவாமிநாதன், கண்காணிப்பாளர்கள் சுப்புலட்சுமி, முருகானந்தம், ஆய்வாளர் ரோகிணி, முன்னாள் எம்.எல்.ஏ., சங்கரலிங்கம், நகராட்சி கவுன்சிலர் ஆனந்தகிருஷ்ணன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் வேல்சாமி, குமாரவேல், ஆறுமுகம், முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் டி.எஸ்.பி., கலிபுல்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், ஜெயக்குமார் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்திற்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சார்பில் ரதவீதிகளில் வெப்பத்தை குறைக்கும் விதமாக தண்ணீர் தெளிக்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி டாக்டர் செந்தில்சேகர் தலைமையில் மருத்துவ குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான "தபசுக்காட்சி வரும் 1ம் தேதி மாலை 6 மணியளவில் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar