பதிவு செய்த நாள்
24
ஆக
2022
04:08
சிவகங்கை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பா.ஜ.,நடத்தும் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலத்திற்கு 381 இடங்களில் 389 சிலைகள் வைக்க போலீஸ் அனுமதித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் பா.ஜ., சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழாவிற்கு மாவட்ட அளவில் 381 இடங்களில் 389 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டள்ளது.
சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட இடங்களில் 5 முதல் 13 அடி உயர சிலைகள் வரை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். சதுர்த்தி ஊர்வலத்திற்காக பா.ஜ., சார்பில் விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன. ஆக., 27 அன்று காப்பு கட்டுடன் அந்தந்த பகுதி இந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்வார்கள். ஆக., 31 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்கார, அபிேஷகம், கொழுக்கட்டை படையல் நடத்தப்படும். ஆக., 31 முதல் செப்., 4 ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நகரில் உள்ள சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
* செப்., 4 ல் சிவகங்கையில் ஊர்வலம்: சிவகங்கையில் செப்., 4 ம் தேதி மாலை 4:00 மணிக்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் எம்.குணசேகரன் தலைமை வகிப்பார். பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராகிம் ச பேசுகின்றனர். பின்னர் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும்.