தீர்த்த மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2012 10:09
கரூர்: சின்ன ஆண்டாங்கோவில் எம்.ஜி.ஆர்., நகர் தீர்த்த மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது. கரூரில் பிரசித்தி பெற்ற தீர்த்த மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா, நேற்று, காலை, 6 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது. காலை, 8 மணிக்கு முரளி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் எம்.ஜி.ஆர்., நகர் பொது மக்கள் செய்திருந்தனர்.