விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் தேய்பிறை சதுர்த்திக்கு மஹா சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்படுகிறது. மஹா சங்கடஹர சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரம், திருக்கச்சிநம்பி தெருவில் உள்ள, திருக்கச்சியம்பதி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகமும், அருகம்புல், மலர் மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை, கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் ராகு, கேது, சனி பகவான்களுக்கும் அபிஷேகம் நடந்தது. பின், நட்சத்திர விருட்ச விநாயகருக்கு, பல்வேறு நறுமண திரவியங்கள் மூலம் அபிஷேகமும், மலர் அலங்காரமும், மஹா தீபாராதனையும் நடந்தன. காஞ்சிபுரம் காந்தி சாலை, வன்னீஸ்வரர் கோவில் சித்தி செல்வ விநாயகர், வி.என்.பெருமாள் தெரு விக்னராஜ விநாயகர், வரதராஜபுரம் தெரு வரசித்தி விநாயகர், திருக்காலிமேடு ஆனந்த விநாயக ர். சவுராஷ்டிரா தெரு செல்வகணபதி, பாலாஜி நகர் சிந்தாமணி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவிலில் நேற்று மஹா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது.