ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் பள்ளிகொண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2026 10:09
கோவை; ஆவணி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் அமைந்துள்ள பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் மகாலஷ்மி தாயாருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் பெருமாள் மற்றும் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.