கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு உலக அமைதி, நாட்டு நலன், தோஷ நிவர்த்தி வேண்டி மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் நடந்தது. பத்ரகாளியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்து, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தினர். விழாவையொட்டி கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.