புதுக்கோட்டை மேல் மங்கலம் என்ற ஊரில் கனுப்பிடி வைக்க பார்கவி அம்பாள் பிறந்தகம் வருவாள். வராக நதிக்கரையில் சின்னதாகப் பந்தல் போட்டு, அம்பாளைக் கோயிலிலிருந்து எடுத்து வந்து வைப்பார்கள். பூஜைக்குப் பிறகு, கலந்த சாத வகைகளை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகிப்பார்கள். மாலை, அம்பாளை தங்கள் வீட்டுப் பெண்ணாக நினைத்து புடவை, பழம், பூ என்று ஊர் மக்கள் சீர் தருவதும், அவற்றை எடுத்துக் கொண்டு அம்பாள் ஊர்வலம் வருவதும் கண் கொள்ளாக் காட்சியாகும்.