பழனி: பெரியநாயகியம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பழனி மலைக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை விமரிசையாக நடைபெற்றது. 7ம் நாள் திருவிழாவாக சனிக்கிழமை காலை வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகர் திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலையில் அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.