மயிலம் தென்பசியார் முருகன் கோவில் 30ம் தேதி மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2014 12:06
மயிலம் : தென்பசியார் கிராமத்திலுள்ள விநாயகர், பால முருகன், அய்யப்பன் கோவில்களில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் வரும் 30ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 29ம் தேதி மாலை 3.30 மணிக்கு விநாயகர் வழிபாடும், மாலை 4 மணி முதற்கால வேள்ளி வழிபாடும், இரவு 9 மணிக்கு நாடிசந்தானம் நடக்கிறது. 30ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால வேள்வி வழிபாடு, 9.45 மணிக்கு திருக்குடம் புறப்பாடு நடக்கிறது. காலை 10 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமை தாங்கி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். மாலை 6 மணிக்கு வள்ளி, தேவசேனா, பாலசுப்பிர மணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 10 மணிக்கு உற்சவர் வீதியுலா காட்சி நடக்கிறது.