நத்தம்: நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர், தயிர், தேன், விபூதி, திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கைலாசநாதருக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.