இருந்தால் எழுந்திருக்காத மகனுக்கு, படுத்தால் எழுந்திருக்காத பெண்ணைக் கல்யாணம் செய்து வைத்தார்கள். இதற்கு என்ன பொருள் தெரியுமா? இருந்தால் எழுந்திருக்காத மகன் என்றால் சோம்பேறி, படுத்தால் எழுந்திருக்காத பெண் என்றால் மூதேவி என்றுதானே நாம் பொருள் கொள்வோம். ஆனால் உண்மையான பொருள் இதுவல்ல. இருந்தால் எழுந்திருக்காத மகன் ஒருவன் தாழ்த்தரையில் அமர்ந்திருந்தால் வீட்டில் உள்ள தந்தை, தமையன், பாட்டன், மாமன் முதலியோர் வந்தால் எழுந்திருக்க வேண்டியதில்லை. நாற்காலியில் அமர்ந்திருந்தால் பெரியோர்கள் வரும் போது எழுந்து உட்கார வேண்டும். அதனால், தரையில் இருக்கின்ற மகன் எழுந்திருக்கவேண்டியதில்லை. எனவே, இருந்தால் எழுந்திருக்காத மகன் என்றால் அடக்கமான பிள்ளை என்பது கருத்து. படுத்தால் எழுந்திருக்காத பெண். ஒரு பெண் பொழுது போனதும் சோம்பலாகப் படுக்கையில் பொழுது போனதும் சோம்பலாகப் படுக்கையில் படுத்தால் கணவன், மைத்துனன், மாமன் முதலியோர் ஒவ்வொருவராக வந்தால் எழுந்து எழுந்து உணவு படைக்கவேண்டும். இரவில் எல்லோருக்கும் உணவு படைத்தபின், தான் உண்டு படுக்க வேண்டிய காலத்தில் படுத்துக் கொண்டால் திரும்பவும் எழுந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது இதன் கருத்து.