நாயன்மார்களில் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தவர் திருநாவுக்கரசர். இவரது இயற்பெயர் மருள்நீக்கியார். முதலில் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்ட இவர், கடலூர் அருகிலுள்ள வீராட்டானத்துறை சிவன் அருளால் மீண்டும் சைவ சமயத்திற்கு வந்தார். சைவத்தில் இணைந்த அவரை சமண மதத்தில் ஈடுபாடு கொண்ட மகேந்திர பல்லவ மன்னன், சுண்ணாம்புக் காளவாசலில் இட்டும், விஷ உணவு கொடுத்தும், யானையின் காலாலும் மிதிக்கச் செய்தான். ஆனால் சிவனருளால் நாவுக்கரசர் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து, கல்லில் கட்டி கடலில் வீச ஆணையிட்டான். மனம் கலங்காத நாவுக்கரசர் “கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே,” என்று வீரம்பொங்க பாடினார். கட்டிய கல் பூவாக மாறி கடலில் மிதந்தது. நாவுக்கரசர் கரையேறினார். ஆச்சரியமடைந்த மன்னன், மனம் மாறி சைவ சமயத்திற்கு மாறினான்.