வேதநாராயண பெருமாள் கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2017 02:04
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, வேதநாராயண பெருமாள் கோவிலில், நேற்று மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆத்தூர்அருகே, மேற்குராஜாபாளையம் கிராமத்தில், பழமை வாய்ந்த வேதநாராயண பெருமாள் கோவில் உள்ளது. நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கோர்க்க சித்தர் குடில்பகுதியில், மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், ஆத்தூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், வழிபாடு செய்தனர்.