ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் சீனாபுரம் என்னும் இடத்தில், 60 அடி உயரக் குன்றின் மேல் அமைந்துள்ள கோயிலில் முருகன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு வைகாசி விசாகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மண்டலத்தில் 6 மலைகளிலும், 6 கோயில்களில் முருகன் அருள்வதால் இதை கொங்கு மண்டல அறுபடை வீடுகள் என்பார்கள்.