நாமக்கல் மாவ்டம், ராசிபுரத்தில் உள்ளது நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில், பெரும்பாலும் மாரியம்மன் கோயில்களில் விழாக்காலங்களில் மட்டுமே அம்பாளுக்கு எதிரே கம்பம் நடப்படும். இக்கம்பத்தை சுவாமியாகவே கருதி பூஜை செய்வர். ஆனால் இத்தலத்தில் அனைத்து நாட்களிலும் அம்பாளின் எதிரே கம்பம் நடப்பட்டிருக்கிறது. அம்பிகை தினமும் கம்பத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ளும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது நம்பிக்கை. இதனாலேயே இந்த அம்மனை நித்ய சுமங்கலி மாரியம்மன் என்று அழைக்கிறார்கள். கார்த்திகை தீபத்திருநாளன்று இந்த அம்பாள் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சி தருவார்.