பதிவு செய்த நாள்
21
ஜூலை
2017
02:07
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.இதே போல், நகரி பகுதியில் அமைந்துள்ள சாய் பாபா கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.