மகாபாரதத்தில் துரியோதன் என்றாலே நாம் அனைவரும் அவனை கொடியவனாகவே படித்திருக்கிறோம். ஆனால், அவனையும், கவுரவர்களையும் முன்னோர்களாக வழிபடுவர்களும் இருக்கிறார்கள். உத்தராஞ்சல் மாநிலத்தில் ஜகோல், மோரி ஆகிய பகுதிகளில் துரியோதனனுக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன. கவுரவர் வீழ்ச்சிக்காகவும், துரியோதனன் மரணத்துக்காகவும் வருந்திய மக்களின் கண்ணீர்ப் பெருக்கே டான் நதியானதாம். அதனால், அதைக் குடிப்பதற்குப் பயன்படுத்த மாட்டார்களாம்.