கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவசிவ என்கிலர் தீவினையாளர்சிவசிவ என்றிடத் தீவினை மாளும்சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்சிவசிவ என்றிடச் சிவகதி தானே.காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொருளாவதுநாதன் நாமம் நமச்சிவாயவே.மாசில் வீணையும் மாலை மதியமும்வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்மூசு வண்டறை பொய்கையும் போன்றதேஈசன் எந்தன் இணையடி நீழலே!பித்தா பிறைசூடி பெருமானே அருளாளாஎத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னைவைத்தாய் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே!உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்நிலவுலாவிய நீர்மலி வேணியன்அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகிநில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்எல்லாப் பிழையும் பொறுத்தருள் கச்சிஏகம்பனே!பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்துமின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே!மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமேஅன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!ஐந்து அடையாளம் சிவபெருமானுக்கு ருத்ராட்சம், விபூதி, வில்வம், சிவலிங்கம், ஐந்தெழுந்து மந்திரமான ‘நமசிவாய’ என்னும் ஐந்து அடையாளங்கள் உள்ளன. சிவராத்திரியன்று திருநீறிட்டு, ருத்ராட்சம் அணிந்து, நமசிவாய மந்திரம் ஜெபித்து, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடவேண்டும்.