தண்ணீர் விஷயத்தில்மாநிலங்கள் விட்டுக் கொடுத்து போக வேண்டியது அவசியமாகும். ஒருவர் இறந்த பிறகு அவர், இறைவனாகிய அல்லாஹ் முன்பு கொண்டு வரப்படுவார். அவரிடம் அல்லாஹ், “ஆதமின் மகனே! (ஆதம் (அலை)என்பவரே உலகில் முதலாவதாக இறைவனால் அனுப்பப்பட்டவர் என்றும், அவரது வழித் தோன்றல்கள் அனைவரையும் அவரது குழந்தைகளாகக் கருதி அல்லாஹ் இப்படி அழைப்பான் என்றும் இஸ்லாம் கூறுகிறது) நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். நீ எனக்குபுகட்டவில்லையே,” என்பான்.அதற்கு அந்த மனிதன்,“இறைவா! நீயோ இந்தஉலகத்தின் அதிபதியாக இருக்கும்போது நான் உனக்கு எப்படி தண்ணீர் தருவேன்,” என்று புரியாமல் கேட்பான். மேலும், இறைவன் தன்னிடம் தண்ணீர் கேட்டது எப்போது என தெரியாமல் குழம்புவான்.அப்போது அல்லாஹ்,தன்னுடைய அடியார்ஒருவரின் பெயரைச் சொல்லி, “இந்த நபர் இந்த நாளில்இந்த நேரத்தில் உன்னிடம் தண்ணீர் கேட்டார். நீகொடுக்கவில்லையே,” என ஞாபகப்படுத்துவான். அந்த மனிதனுக்கு அந்த நிகழ்வு நினைவுக்கு வரும். அப்போது அல்லாஹ் அவனிடம், “நீ அவனுக்கு தண்ணீர் கொடுத்திருந்தால்,நீ என்னிடத்தில் அதனைப் பெற்றிருப்பாய்,” என்பான். தண்ணீர் கேட்டவர்களுக்கு ‘இல்லை’ என மறுக்காமல் கொடுத்தால், இறைவன்பெருமழையைப் பெய்வித்து, இருதரப்பு பிரச்னையையும் பூர்த்தி செய்வான்.