இயேசு கிறிஸ்து, 33 வருடங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து அற்புதம் செய்தார். மனிதன் பாவமன்னிப்பை பெற ஆட்டையும், மாட்டையும், பறவைகளையும் பலியாக கடவுளுக்கு செலுத்தி வந்தான். எனவே இயேசு மனிதனாகப் பிறந்து உலக மக்களின் பாவப்பலியாக சிலுவை சரணத்தை ஏற்றுக் கொண்டார். மூன்றாம் நாளில் உயிர்த்து எழுந்து 40 நாட்கள் மக்களுக்கு காட்சி தந்தார். இயேசுவின் மறைவிக்குப்பின் 300 ஆண்டுகள் கழித்து ரோம் அரசு அவரைத் இறைவனாக ஏற்றுக் கொண்டது. இயேசு என்பதற்கு விடுதலையாக்குபவர் என்றும் கிறிஸ்து என்பதற்கு தீர்க்கதரிசி என்றும் அர்த்தம்.கிறிஸ்துமஸ் உருவான விதம்: கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்ட், மாஸ் என்ற இரு வார்த்தைகளின் இணைப்பால் உருவானது.கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் கிறிஸ்து பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். யூதர்களின் பருவகாலம், நாட்காட்டிகள் மூலம் கணக்கிட்டு டிச.25 கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுகின்றனர்.முதன் முதலில் 4ம் நுாற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் மற்ற கிறிஸ்தவர்கள் மறுப்பு தெரிவித்து, ஜன.6ல் இயேசு பிறந்ததாக கொண்டாடினர்.